வியாழன், 24 மே, 2012

சில மாதங்களில் தவழணும்... தத்தி தத்தி நடக்கணும்... இல்லே டாக்டரை பாருங்க

‘‘எந்தவொரு குழந்தையும் பிறந்த சில மாதங்களில் தவழணும்... தத்தி தத்தி நடக்கணும்... ஓடணும்...பேசணும்... இதுல ஏதாவது ஒன்றில் பிரச்சனை இருந்தால் உடனடியா குழந்தைய பரிசோதிக்கிறது நல்லது. அதே போல் கேட்பது, பார்ப்பது, தொடுவது, சுவைப்பது... போன்ற விஷயங்கள் தவிர, சில உணர்ச்சிகள் நமக்குள்ளே மறைந்து இருக்கும்.

மத்தவங்களை அழுத்தமா பிடிக்கிறது, மாடிப்படியில ஏறும் போது படியோட அகலத்தை கணக்கிடுவது என சிலவற்றை சொல்லாம். இவை எல்லாரிடமும் ஒளிந்து இருக்கும். ஆனா, நிஜம் வேறு. ஆம்... சில குழந்தைகளுக்கு இந்த உணர்ச்சிகள் மாறுபட்டிருக்கும்‘‘ என்கிறார் உணர்ச்சி நிபுணர்
சவுமியா. இவர் உணர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளுக்கான ‘பைவ்‘ என்ற சிறப்பு பயிற்சி மையத்தை ஆழ்வார்பேட்டையில் நிர்வகித்து வருகிறார்.

அவர் கூறியதாவது:
‘‘ஒரு விஷயத்தை பார்த்து அதையே திரும்ப செய்வது தான் குழந்தை தனம். இது இயற்கை. சில குழந்தைங்களால அப்படி செய்ய முடியாது. அதுக்காக அவங்க மனரீதியா பாதிக்கப்பட்டவங்கன்னு அர்த்தமில்லை. உணர்ச்சிகளை அறிந்துக் கொள்ளும் நரம்புகள் அவங்களுக்கு ஒத்துழைக்காது அவ்வளவுதான்.

இந்த உணர்ச்சி கோளாறை மூணு வகையா பிரிக்கலாம். மாடுலேஷன், டிஸ்கிரிமினேஷன், மோட்டார். ஒவ்வொரு குறைப்பாட்டுலேயும் பார்க்கிறது, கேட்கிறது, உணர்வது அவங்களுக்கு பிரச்சனை இருக்கும். மாடுலேஷன் கோளாற்றில், கேட்கும் திறன் பிரச்சனை இருக்கும். இந்த குழந்தைகளுக்கு சில குரல்கள் பிடிக்காது. பார்க்கும் திறன்ல அதிக பிரகாசமான விளக்கை பார்த்துக்கிட்டே இருப்பாங்க.

அல்லது வெளிச்சத்தையோ, நிறைய படங்கள் கொண்ட புத்தகத்தையோ கண்டா வெறுப்போட முகத்தை திருப்பிப்பாங்க. தொடறதுல, யாராவது அணைச்சுக்கிட்டே இருக்கணும். இல்லைன்னா சட்டையில இருக்கிற சின்ன வேலைப்பாடுகூட அவங்கள பாடாய்படுத்தும். இரண்டாவது, டிஸ்கிரிமினிஷேன், அதாவது இரண்டு வெவ்வேறு ஒலிகளை வித்தியாசப்படுத்த தெரியாது. கரும்பலகைல இருக்கிற வார்க்கியத்தை பார்த்து எழுத சிரமப்படுவாங்க.

சில குழந்தைகங்க நெருக்கி எழுதுவாங்க, இல்லை என்றால் ஒரு பக்கத்தில் இரண்டு வரி மேல் எழுத மாட்டாங்க. மத்தவங்க தங்களை தொட்டாலும் இவங்க உணர மாட்டாங்க. கடைசி குறைப்படு மோட்டார். அவங்க மட்டுமே பேசுவாங்க. நாம சொல்றதை கேட்டு திருப்ப சொல்ல தெரியாது. மாடிப்படி ஏறும் போது விழுந்துடுவமோன்னு பயப்படுவாங்க. உடலை சமமாக்கி, கணக்கு போட்டு படி ஏற தெரியாது.

உணர்ச்சி குறைப்பாடுள்ள குழந்தைக்கு ஆடிசம், ஹைப்பர் ஆக்டிவிட்டி மாதிரியான பிரச்சனையும் இருக்கும். அதற்கு ஏற்ப பயிற்சி கொடுக்கணும். எந்தவொரு குழந்தையும் பிறந்த கொஞ்ச நாளைக்கு தவழணும், தத்தி தத்தி நடக்கணும், ஓடணும், பேசணும். இதில் எந்தவொரு செயலில் பிரச்சனை இருந்தாலும் உடனடியாக பரிசோதனை செய்து அதற்குரிய பயிற்சியை அளித்தால் குழந்தையின் வளர்ச்சி சீராக அமையும்” என்றார் சவுமியா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக