ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

பருக்கள் இல்லாத சருமத்திற்கான சில எளிய சிகிச்சைகள்!!!

பருக்கள் இல்லாத பளபளக்கும் சருமத்தை பெறுவதற்கு எளிய சிகிச்சை முறைகளை ஆவலுடன் தேடி கொண்டிருக்கும் பல பேரில் நீங்களும் ஒருவரா? அப்படியானால் இனி எங்கும் தேட தேவையில்லை. இந்த கட்டுரையை கடைசி வரை படித்தாலே போதுமானது. உங்களுக்கு வேண்டியது உங்களுக்கு கிடைக்கும்.
முகத்தில், குறிப்பாக கோடை காலத்தில், வரும் பருக்களை பெண்கள் முன் கூட்டியே கணித்திருப்பார்கள். பொதுவாக அதற்கு சிகிச்சை எடுத்திட அவர்கள் மருத்துவரை அணுகுவார்கள். சிகிச்சைக்காகவும் மருந்து மாத்திரைக்காகவும் பணத்தை தண்ணி மாதிரி செலவும் செய்வார்கள். பருக்கள் இல்லாத சருமத்தை பெற சில எளிய டிப்ஸ்களை பின்பற்றினால் இந்த செலவுகள் அனைத்தையும் தடுக்கலாம். பரு பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காண சில பயனுள்ள வழிமுறைகள், இதோ:
பருக்கள் இல்லாத சருமத்திற்கான சில எளிய சிகிச்சைகள்!!!
அடிக்கடி முகத்தை கழுவுங்கள்
கோடைக்காலத்தில், உங்கள் எண்ணெய் சுரப்பி அதிகமாக வேலை செய்வதால், உங்கள் முகம் அடிக்கடி எண்ணெய் பசையுடன் மாறி விடும். முகத்தில் பருக்கள் ஏற்படுவதற்கு இதுவே முக்கிய காரணமாக உள்ளது. நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம், நுரையை உண்டாக்கும் நல்லதொரு க்ளென்சர் மூலமாக உங்கள் முகத்தை தினமும் இருமுறை கழுவ வேண்டும். தினமும் ஒரு முறை கழுவினாலும் கூட போதுமானதே. அதனால் அதனை முயற்சி செய்து பார்த்து, ஒரு நாளைக்கு எத்தனை முறை கழுவ வேண்டும் என்பதை தீர்மானித்து கொள்ளுங்கள்.
மேக்-அப்பை நீக்கிடுங்கள்
நல்ல தோற்றத்தை பெறுவதற்கு, பெண்கள் மேக்-அப் போட பெரிதும் விரும்புகின்றனர். இத்தனை சரிவர கையாளவில்லை என்றால், பருக்கள் உண்டாகும். படுக்க செல்வதற்கு முன், எப்போதும் மேக்-அப்பை கலைத்து விட்டே செல்லுங்கள். அப்படி செய்யாவிட்டால், பருக்களை நீங்களே உங்கள் முகத்தில் குடியேற வரவேற்கின்றனர்.
தயவு செய்து புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்
ஆம், தயவு செய்து சொல்வதை கேளுங்கள். முகத்தில் வரும் பருக்களை நீக்க வேண்டும் என்றால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை முதலில் கை விடுங்கள். இந்த பழக்கத்தால் உங்கள் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் பருக்களும் தீவிரமடையும்.
மேற்கூறிய அனைத்தும் எளிய வழிமுறைகளாக இருந்தாலும் கூட, பருக்கள் இல்லா சருமத்தை பெறுவதற்கு சிறந்த டிப்ஸாக விளங்குகிறது. அதனால் சமுதாயத்தில் தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக உங்களால் நடமாட முடியும். இந்த டிப்ஸ்கள் எல்லாம் சிறப்பாக செயல்படுவதில்லை என்று பல பெண்கள் இதனை தவிர்த்து வருகிறார்கள். அப்படியானால் அது அவர்களின் தவறான புரிதலாகும். அதனால், கோடைக்காலத்தின் போது, இந்த டிப்ஸ்களை பின்பற்றி, பருக்கள் இல்லாத முகத்தினை பெற்றிடுங்கள்.

நாக்கில் படியும் மஞ்சள் நிற அழுக்கைப் போக்க சில டிப்ஸ்...


நாக்கின் மேற்புறத்தில் வெள்ளையாக ஒரு படலம் சூழ்ந்திருக்கும். இது ஆரோக்கியமற்ற வாய் பராமரிப்பைக் குறிக்கும். இத்தகைய வெள்ளைப்படலத்தால் எந்த ஒரு தீவிரமான ஆரோக்கிய பிரச்சனையையும் சந்திக்கப் போவதில்லை என்றாலும், இந்த வெள்ளைப்படலம் கடுமையான வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
பொதுவாக நாக்கில் பாக்டீரியாக்கள் மற்றும் இறந்த செல்கள் போன்றவை தங்கியிருப்பதால் தான், நாக்கின் மேலே வெள்ளையான படலம் காணப்படுகிறது. மேலும் இந்த வெள்ளைப்படலமானது மருந்து மாத்திரைகள் எடுக்கும் போது, மது அருந்தும் போது, புகைப்பிடிக்கும் போது, உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும் போது அதிக அளவில் ஏற்படும்.
ஆகவே நாக்கில் உள்ள வெள்ளைப்படலத்தைப் போக்கவும், வாயில் இருந்து துர்நாற்றம் வருவதை தவிர்க்கவும் வேண்டுமானால், பற்களை தினந்தோறும் இரண்டு முறை துலக்குவதுடன், நாக்குகளையும் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். இப்போது நாக்கில் வெள்ளைப்படலம் ஏற்படாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

நாக்கில் உள்ள அழுக்கைப் போக்க சில டிப்ஸ்..



போதிய தண்ணீர்

தினமும் உடலுக்கு போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், நாக்கில் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் தங்கிவிடும். அதுமட்டுமின்றி, தண்ணீரை குறைவாக குடித்தால், உணவுத்துகள்கள் நாக்கில் உள்ள வெடிப்புக்களில் தங்கிவிடும். ஆகவே நாக்கை சுத்தமாக வைத்துக் கொள்ள தினமும் தண்ணீரை அதிக அளவில் குடித்து வரை வேண்டும்.




கொப்பளிக்கவும்

தினமும் மூன்று முறை வெதுவெதுப்பான நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். இதனால் நாக்கில் நச்சுக்கள் தங்குவதைத் தவிர்க்கலாம். அதிலும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அந்த நீரை வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். இந்த மாதிரி தினமும் காலை மற்றும் இரவில் படுக்கும் முன் செய்து வருவது மிகவும் நல்லது.





சர்க்கரைப் பொருட்களை தவிர்க்கவும்

சர்க்கரை கலந்த பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் மிகவும் ஆபத்தான பாக்டீரியாக்கள் இருப்பதால், அவை நாக்கில் வெள்ளைப்படலத்தின் அளவை அதிகரித்துவிடும். எனவே நாக்கை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமெனில், சர்க்கரை உள்ள பொருட்கள் அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.


நாக்கை சுத்தப்படுத்தவும்

தினமும் பற்களை துலக்கும் போது, நாக்கை சுத்தம் செய்யும் பொருள் கொண்டோ அல்லது டூத்பிரஷ் கொண்டோ சுத்தம் செய்ய வேண்டும். அதிலும் பற்களை துலக்கிய பின், சிறிது உப்பை நாக்கில் தூவி மென்மையான பிரஷ் கொண்டு தேய்த்தால், நாக்கில் தங்கியுள்ள பாக்டீரியாக்களை நீக்கிவிடலாம். முக்கியமாக நாக்கை தேய்க்கும் போது, கடுமையான முறையில் தேய்க்க வேண்டாம். இல்லாவிட்டால், நாக்கில் கொப்புளங்கள் வருவதோடு, இரத்தக்கசிவையும் ஏற்படுத்திவிடும். எனவே மென்மையாக கையாள வேண்டும்.


மஞ்சள்

நாக்கை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, தினமும் ஒரு டம்ளர் தண்ணீரில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் நாக்கில் வெள்ளைப்படலம் வருவதைத் தடுக்கலாம். அதுமட்டுமின்றி, தினமும் நாக்கில் தேனை தடவி வருவதும் நல்லது.

தேங்காய் எண்ணெய்

நாக்கில் உள்ள வெள்ளைப்படலத்தை நீக்கிய பின், தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டால், நாக்கில் உள்ள புண்களை விரைவில் குணமாக்கலாம்.

தயிர்

நாக்கில் வெள்ளைப்படலத்தை தடுக்க வேண்டுமானால், கான்டிடா என்னும் பூஞ்சையின் வளர்ச்சியை தடுக்க வேண்டும். இத்தகைய பூஞ்சையின் வளர்ச்சியை தடுக்கும் குணம் தயிருக்கு உள்ளதால், தினமும் இரவில் படுக்கும் முன், நாக்கை சுத்தம் செய்த பின் தயிரை நாக்கில் தடவிக் கொண்டால், நாக்கில் பாக்டீரியாவின் தாக்கம் இல்லாதவாறு பாதுகாக்கலாம்.