வியாழன், 24 மே, 2012

நிறைப் பராமரிப்பு தாய்க்கும் சேய்க்கும் நலம்

வழமையாகக் கர்ப்பிணிப் பெண்களால் அவர்களை இரண்டு பேருக்குச் சேர்த்துச் சாப்பிடுங்கள் என்றுதான் கூறிவந்தார்கள் பெரியவர்கள். எனினும் அவர்கள் கூறியது எமது நாட்டிற்கே பொருந்தும். ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பெண்களுக்குத்தான் இந்த நிறைப்பராமரிப்பு உகந்தது என்று ஆய்வாளர்கள் விளக்குவதை மனதிற்கொள்ளுங்கள்.

எனினும் எந்த நாட்டிலும் உள்ள அளவிற்கதிகமாக நிறையைக் கொண்ட பெண்கள் தமது கர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது குழந்தைக்கு எந்தவிதத் தீங்கையும் செய்யாது என்கின்றது புதிய ஆய்வொன்று.

இந்த ஆய்வு British Medical Journal ஊடகத்தினால் 7000 பெண்களில் 44 ஆய்வுகளின்மூலம் செய்யப்பட்டிருந்தது. லண்டனைத் தளமாகக் கொண்ட இந்த அணியினரின் ஆய்வின்படி ஒரு சுகாதாரமான உணவுக் கட்டுப்பாட்டைச் செய்வது நிறை அதிகரிப்பதையும் பல சிக்கலான அபாயங்களையும் தடுக்கின்றது என்றது.

ஆனால் தற்போதைய வழிகாட்டிகள் உணவுக்கட்டுப்பாட்டையோ அல்லது நிறைக் கண்காணிப்பையோ செய்யுமாறு கூறவில்லை.

Health and Clinical Excellence இற்கான தேசிய நிறுவனத்தினால் 2010இல் வெளியிடப்பட்ட அறிவுரையில் கர்ப்பகாலத்தில் உணவுக்கட்டுப்பாடு செய்வது குழந்தைக்கு சுகாதாரச் சிக்கல்களை ஏற்படுத்துமென்றே கூறப்பட்டது.

எனினும் பெண்கள் தாங்கள் கருத்தரிக்க முன்பே ஒரு சிறப்பான நிறையினை அடைந்திருக்கவேண்டுமென்றும் கூறப்படுகின்றனர்.

பிரித்தானியாவின் அரைவாசி சனத்தொகையினரும் ஒன்றில் அளவுக்கதிகமான நிறையுடன் அல்லது பருமனாகக் காணப்படுகின்றனர். அத்துடன் இவ்வாறான வீதங்களும் தொடர்ந்தும் அதிகரித்துவருகின்றன.

அத்துடன் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள 20 வீதத்திற்கும் 40 வீதத்திற்குமிடைப்பட்ட பெண்கள் குறிப்பிட்ட நிறையைவிடவும் கர்ப்பகாலத்தில் அதிக நிறையைப் பெற்றுவிடுகின்றனர்.

இதனால் அதிக நிறைகளும் உயர் குருதியழுத்தம் மற்றும் திகதி குறிப்பிடப்பட்டதைவிடவும் முன்பே குழந்தை பிறக்கக்கூடிய நிலையையும் உயிராபத்துக்களையும்கூட ஏற்படுத்தலாம்.

உண்மையில் இந்த ஆய்வில் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி அல்லது இரண்டும் சேர்ந்த நிலைகளை ஒப்பிட்டுப் பார்த்தனர்.

இந்த அறிவுரைகளில் மட்டுப்படுத்தப்பட்ட கலோரிகளை உள்ளெடுப்பது, சமநிலையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் முழுத்தானியங்கள், பழங்கள், மரக்கறிகள் போன்றவை உள்ளடங்கின.

இதன்பின்னர் ஆய்வாளர்கள் கருத்தரித்த பெண்கள் எவ்வளவிற்கு நிறை அதிகரித்துள்ளார்கள் என்று பரிசோதித்ததுடன் ஏதாவது சிக்கல்கள் உள்ளனவா என்றும் பார்த்தனர்.

ஒவ்வொரு நகர்வும் ஒரு பெண்ணின் நிறையைக் குறைத்தபோது உணவுக்கட்டுப்பாடு சிறந்ததொரு விளைவினைத் தந்தது. இதன்போது 4கி.கி. நிறை குறைவு காணப்பட்டது.

உடற்பயிற்சி மூலமெனில், நிறை குறைவு சராசரியாக 0.7கி.கி. இருந்தது. உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் இணைந்தபோது 1கி.கி. சராசரியான நிறைகுறைவு காணப்பட்டது.

இதன்மூலம் குழந்தைகளின் பிறப்பின்போதான நிறைவு பாதிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த ஆய்விற்குத் தலைமைதாங்கிய தமிழ்ப்பெண் வைத்தியரான ஷகிலா தங்கரத்தினம் லண்டன் பல்கலைக்கழகத்தின் குழந்தை வைத்திய ஆலோசகராக உள்ளார்.

இவர் குறிப்பிடுகையில் அதிக நிறையுள்ள பெண்கள் அதிகரித்த சிக்கல்களைக் கொண்டிருந்ததைத் தாங்கள் கண்டதாகத் தெரிவித்தார். நிறைக் கட்டுப்பாடென்பது சிரமமெனினும் அறிவுரைகளின்படி செய்தால் அவர்களால் நிறையைக் குறைக்கமுடியுமென்றார்.

தங்களது குழந்தைகளிற்கு இதனால் பாதிப்பேற்படலாமெனப் பல பெண்கள் நினைக்கலாம். ஆனால் இந்த ஆய்வின்படி உணவுக்கட்டுப்பாடு பாதுகாப்பானெதென்றும் குழந்தையின் நிறை பாதிக்கப்படாதென்றும் தெரியவந்துள்ளது.

எனினும் இதில் கவனிக்கவேண்டியதென்னவெனில் கர்ப்பிணிகள் சாதாரணமாகவுள்ள நிறையைக் குறைக்கக்கூடாதென்பதிலும் அளவுக்கதிகமாக உள்ள நிறையைத்தான் குறைக்கவேண்டுமென்பதையும் விளங்கிக்கொள்ளவேண்டுமென்கின்றனர் ஆய்வுசெய்த வைத்தியர் குழாமினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக